ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; நா.த.க. வேட்பாளர் வேட்பு மனு ஏற்பு!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; நா.த.க. வேட்பாளர் வேட்பு மனு ஏற்பு!!
X

naam tamilar katchi

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 14-ந்தேதி சென்னையில் காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானது. இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்.5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 10-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. கடைசி நாளான நேற்று தி.மு.க. வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும் சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பு மனு பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. நா.த.க. வேட்பாளர் சீதாலட்சுமி போட்டியிடும் சின்னம் குறித்த அறிவிப்பு 20-ந்தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும். வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அடுத்த மாதம் 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

Tags

Next Story