கும்பகோணத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

கும்பகோணத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

பேரணியில் கலந்து கொண்டவர்கள்

கும்பகோணத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

கும்பகோணம் வருவாய் துறை, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி கும்பகோணம், நேருயுவகேந்திரா தஞ்சாவூர், மற்றும் கும்பகோணம் கல்லூரிகள் இணைந்து மாபெரும் "வாக்காளர் விழிப்புணர்வு பேரணி" நடைபெற்றது.

பேரணியை கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா அவர்கள் மற்றும் கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் இருவரும் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார்.

தாசில்தார் . ரவிச்சந்திரன், கும்பகோணம் இந்தியன் ரெட்கிராஸ் துணை தலைவர் ரோசரியோ, உறுப்பினர்கள், மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். நேருயுவகேந்திரா தலைவர் கணேசன் விழாவை ஒருங்கிணைத்தார்.

கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி, அரசு ஆண்கள் கலைக்கல்லூரி, இதயா மகளிர் கல்லூரி, சாஸ்திரா கல்லூரி, மாஸ் கல்லூரி, மாணவ, மாணவிகள், மற்றும் கல்லூரி நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், கும்பகோணம் தன்னார்வ தொண்டர்கள், கலந்து கொண்டு பதாதைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Tags

Next Story