திருவள்ளூர் மத்திய மாவட்ட விவசாய அணி சார்பில் நலத்திட்ட உதவி

திருவள்ளூர் மத்திய மாவட்ட விவசாய அணி சார்பில் நலத்திட்ட உதவி

நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மத்திய மாவட்ட விவசாய அணி சார்பாக பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மத்திய மாவட்ட விவசாய அணி சார்பில் பூவிருந்தவல்லி தொகுதிக்குட்பட்ட பாணவேடு தோட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகள் 254 பேருக்கு மாவட்ட விவசாயி அமைப்பாளர் குமரேசன் ஏற்பாட்டிவ் கல்வி உபகரண பொருட்களை திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும்,

ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான சா.மு. நாசர் மற்றும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகிய இருவரும் இணைந்து மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகையினையும், விவசாயிகளுக்கு மரக்கன்றுகளையும் வழங்கி கழக தலைவரின் பிறந்தநாளை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆர்.டி.ஆதிசேசன்,ஒன்றிய செயலாளர் கமலேஷ், மற்றும் கழக நிர்வாகிகள், பள்ளி மாணவ மாணவிகள் என அனைவரும் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story