விஜய் மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் ரத்து!!

X
vijay
அடுத்த வாரம் சனிக்கிழமை திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் விஜய் மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வாரம்தோறும் சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 13-ஆம் தேதி திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கினார். கடந்த 20 ஆம் தேதி சனிக்கிழமை நாகை மற்றும் திருவாரூரில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து நேற்று (சனிக்கிழமை) அவர் நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். கரூரில் நேற்று இரவு நடந்த நடிகர் விஜய் கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு 39 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அடுத்த வாரம் சனிக்கிழமை திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் விஜய் மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story
