அக்டோபர் 14-ந் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை: சபாநாயகர் அப்பாவு

appavu
6 மாத கால இடைவெளியில் சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில், தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந்தேதி மழைக்கால கூட்டத்தொடராக இது நடக்கிறது. இது தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:- சட்டப்பேரவை விதி 24 (1)-ன் கீழ் சட்டசபை கூட்டம் அக்டோபர் 14-ந்தேதி காலை 9.30 மணிக்கு கூட இருக்கிறது. அன்றைய தினம் முன்னாள் எம்.எல்.ஏ. 8 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட இருக்கிறது. மேலும், வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மேலும், 2025-2026-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினத்திற்கான நிதி அனுமதியளிக்கப்படும். எத்தனை நாட்கள் கூட்டம் நடைபெறும் என்பது குறித்து அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும் என்றார்.
