ஆந்திராவில் பறக்கும்படை சோதனை; பவன்கல்யாண் தொகுதியில் ரூ.17 கோடி தங்கம் பறிமுதல்

ஆந்திராவில் பறக்கும்படை சோதனை; பவன்கல்யாண் தொகுதியில் ரூ.17 கோடி தங்கம் பறிமுதல்

Pawan

நடிகர் பவன் கல்யாண் போட்டியிடும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடத்தில் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் ₹17 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.சுங்கச்சாவடியில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது ஏ.டி.எம்.மையத்திற்கு பணம் கொண்டு செல்லும் தனியார் நிறுவன பாதுகாப்பு வாகனத்தை திறந்து சோதனையிட்டனர்.அதில், சுமார் ₹17 கோடி மதிப்பிலான தங்கம் இருந்தது. விசாரணையில், விசாகப்பட்டினத்தில் இருந்து காக்கிநாடாவிற்கு தங்கம் கொண்டு செல்வது தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் தங்கத்தை பறிமுதல் செய்து பித்தாபுரம் தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் காக்கிநாடா கருவூல அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

Read MoreRead Less
Next Story