உத்தர பிரதேசத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம்!!
PM Modi
உத்தர பிரதேசத்தில் சாலை விபத்தில் 18 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருத்தமும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்கள் குடும்பத்துக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணத் தொகை வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Next Story