விஜய் பேச துவங்குவதற்கு முன்பே 3 பேர் உயிரிழப்பு: துரைமுருகன்

விஜய் பேச துவங்குவதற்கு முன்பே 3 பேர் உயிரிழப்பு: துரைமுருகன்
X

sattai duraimurugan

விஜய் பேச துவங்குவதற்கு முன்பாகவே கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர் என யூடியூபர் சாட்டை துரைமுருகன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக யூடியூபர் சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் தளத்தில், “விஜய் பேச துவங்குவதற்கு முன்பாகவே கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர் ! விஜய்யின் பிரச்சார வாகனத்தின் உள்ளே இருந்தவர்கள் ஆதவ் அர்ஜூனா உட்பட அனைவருக்கும் மக்கள் மரணிப்பதை பார்த்தும் விஜய்க்கு தகவல் தெரிவிக்காமல் தொடர்ந்து அவர் பேசிக்கொண்டுருந்துள்ளார் ! கொண்டாட்ட மனநிலையும் ,எந்த விதிகளையும் பின்பற்றாத தொண்டர்களும் ,கூட்டத்தை பெரிதாக காட்ட வேண்டும் என்கிற மாஸ் மனநிலையும் மட்டுமே இம்மரணங்களுக்கான முதன்மை காரணம் ! 10 ஆயிரம் காவலர்கள் இருந்திருந்தாலும் , ஏன் துணை இராணுவமே வந்தாலும் ரசிக மனநிலையில் உள்ள கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாது !” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story