நாடாளுமன்ற, இடைத்தேர்தல் செலவுக்கு ₹58.58 கோடி ஒதுக்கீடு: போலீசுக்கும் ₹23.72 கோடி அனுமதி

நாடாளுமன்ற, இடைத்தேர்தல் செலவுக்கு ₹58.58 கோடி ஒதுக்கீடு: போலீசுக்கும் ₹23.72 கோடி அனுமதி


இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 11.4.2024ம் தேதியிட்ட கடிதத்தில், ஊதியம் வழங்குவது தொடர்பாக ஒருங்கிணைந்த அறிவுறுத்தல்களையும், ஊதிய விகிதங்களையும் வெளியிட்டுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கான இடைத் தேர்தலுக்கு வரும் 19ம் தேதி வாக்குப் பதிவு நடக்க இருக்கிறது. அப்போது வாக்குப்பதிவு, வாக்கு எண்ணுதல், மற்றும் பிற குறிப்பிட்ட வகை பணியாளர்களுக்கு வழங்குவதற்கான நிதியின் தேவை குறித்து பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, ₹58 கோடியே 58 லட்சத்து 26 ஆயிரம் தற்காலிக முன்பணமாக பெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Read MoreRead Less
Next Story