“வரி வாங்கத் தெரியுது.. நிதி கொடுக்கத் தெரியாதா?” : ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!!

“வரி வாங்கத் தெரியுது.. நிதி கொடுக்கத் தெரியாதா?” : ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!!

stalin

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பாஜ ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்திருந்தது.அதன்படி, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். வரி வாங்கத் தெரியுது.. நிதி கொடுக்கத் தெரியாதா? என ஒன்றிய அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

Next Story