அட்சய திருதியையான இன்று காலையிலேயே 2 முறை உயர்ந்த தங்கம் விலை :ஒரு சவரன் ரூ.720 உயர்ந்து ரூ.53,640-க்கு விற்பனை!

அட்சய திருதியையான இன்று காலையிலேயே 2 முறை உயர்ந்த தங்கம் விலை :ஒரு சவரன் ரூ.720 உயர்ந்து ரூ.53,640-க்கு விற்பனை!

Gold

அட்சய திருதியை இன்று கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் தங்கம் விலை 2-வது முறை உயர்த்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒரு சவரன் ரூ.55,120 என்ற புதிய உச்சத்தை தொட்டது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு தங்கம் விலை உயர்வும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதனிடையே அட்சயதிருதியை காரணமாக தமிழகம் முழுவதும் நகைக்கடைகளை இன்று அதிகாலையிலேயே திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அட்சய திருதியையில் ‘குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும்’ என்ற எண்ணம், மக்கள் மனதில் சமீபகாலமாக நிலைத்து விட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று காலையிலேயே 2 முறை உயர்ந்துள்ளது. எனவே அட்சயதிரிதியையான இன்று நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது.

Read MoreRead Less
Next Story