மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு!: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு..!

Modi

Modi

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வழக்கு தொடர்ந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது வெறுப்புணர்வு பேச்சுக்களை பேசி வருவதாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில் அவசர வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி வருவதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Read MoreRead Less
Next Story