செய்திதேர்தல்பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரேபரேலி தொகுதியில் ராகுல் போட்டி

செய்திதேர்தல்பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரேபரேலி தொகுதியில் ராகுல் போட்டி

Ragul

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘இது ஒரு நீண்ட தேர்தல் செயல்முறை. இன்னும் சில சதுரங்க நகர்வுகள் உள்ளன. பிரியங்கா தேர்தலிலும் போட்டியிடவில்லை. அவர் எந்தவொரு தேர்தலில் போட்டியிட்டாலும் நாடாளுமன்றத்தை அடைய முடியும். ஆனால் தற்போது பிரசாரத்தின் போது மோடி கூறும் பொய்களை அம்பலப்படுத்தி வருகிறார். ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் என்ற செய்திக்கு பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.ஆனால் அவர் அரசியல் மற்றும் சதுரங்கத்தில் அனுபவம் வாய்ந்த வீரர். அவர் தனது நகர்வுகளை கவனமாக பரிசீலித்து வருகிறார். கட்சித் தலைமை இந்த முடிவை எடுத்துள்ளது. ரேபரேலியில் ராகுல் போட்டியிடுவது ஒரு மரபு மட்டுமல்ல. ஒரு பொறுப்பு, கடமை இதில் உள்ளது. ராகுல் காந்தியை எதிர்த்து அமேதியில் போட்டியிடுவதுதான் ஸ்மிருதி இரானியின் ஒரே அடையாளம். இப்போது ஸ்மிருதி இரானி அந்த புகழையும் இழந்துவிட்டார்’என்று கூறினார்.

Read MoreRead Less
Next Story