பள்ளிக் குழந்தைகள் உயிர் காத்த ஓட்டுநர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பள்ளிக் குழந்தைகள் உயிர் காத்த ஓட்டுநர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஸ்டாலின் 

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘‘உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்த நிலையிலும் தன் பொறுப்பிலிருந்த பள்ளிக் குழந்தைகளின் விலைமதிப்பில்லாத உயிர்களை காப்பாற்றி பின்னர் தனது இன்னுயிரை இழந்த சேமலையப்பன் கடமை உணர்ச்சியையும் தியாக உள்ளத்தையும் நாம் தலைவணங்கி போற்றுகிறோம். காலம் சென்ற பள்ளி வாகன ஓட்டுநர் சேமலையப்பன் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த சேமலையப்பன் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்’’ என கூறி உள்ளார்.

Next Story