ஐ.பி.ஏல் - 2024 பிளேஆப் சுற்றுக்குள் நுழையும் 4 அணிகள்?

ஐ.பி.ஏல் - 2024 பிளேஆப் சுற்றுக்குள் நுழையும் 4 அணிகள்?

ஐ.பி.ஏல் - 2024

ஐ.பி.எல் 20 ஓவர் போட்டியில் விளையாடும் 10 அணிகளும் தலா 14 ஆட்டத்தில் ஆட வேண்டும் லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். நேற்றுடன் 56 போட்டிகள் முடிந்து விட்டன.

இதுவரை எந்த அணியும் அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை, பிளே ஆப் சுற்றில் நுழைய கடும் போட்டி நிலவுகிறது.

இரண்டு தடவை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அறிமுக ஐ.பி.எல் லில் கோப்பையை கைப்பற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவை எட்டு வெற்றி மூன்று தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

இரு அணிகளும் மூன்று ஆட்டங்கள் எஞ்சியுள்ளன, இதில் ஒன்றில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு நுழைந்து விடும், கொல்கத்தா அணி மும்பை, குஜராத் ராஜஸ்தான் உடன் மோத வேண்டும். ராஜஸ்தான் அணி சிஎஸ்கே பஞ்சாப் ,கொல்கத்தாவுடன் விளையாட வேண்டும் கொல்கத்தா ராஜஸ்தான் மோதும் போட்டி முக்கியமானதாக இருக்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் 2016 ஆம் ஆண்டு கோப்பையை வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ,டெல்லி கேப்பிட்டல்ஸ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய நாலு அணிகள் தலா 12புள்ளிகளுடன் உள்ளன.

இதில் டெல்லியைத் தவிர மற்ற அணிகளுக்கு மூன்று போட்டிகள் உள்ளன டெல்லிக்கு இரண்டு ஆட்டமே எஞ்சியுள்ளன. சென்னை அணி இனி வரும் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகியவற்றுடன் மோதுகிறது.

இந்த ஆட்டத்திலும் வெல்ல வேண்டும் 18 புள்ளிகளைப் பெறும்போது உறுதியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழையலாம். ஒரு ஆட்டத்தில் தோற்றாலும் மற்ற அணிகள் முடிவை பொறுத்து நிலை இருக்கும் ஹைதராபாத் லக்னோ அணிகளுடன் இதே நிலைதான் இருக்கிறது.

ஐதராபாத்தில் இன்று மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 14 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் இதனால் பிளே ஆப் சுற்று வாய்ப்பு நீடிக்க இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும்.

ஹைதராபாத் மற்ற ஆட்டங்களில் குஜராத், பஞ்சாப் உடனும் லக்னோ அணி, டெல்லி மும்பை உடனும் விளையாடுகின்றன. டெல்லி அணி எஞ்சிய ஆட்டங்களில் பெங்களூரு, லக்னோவுடன் மோதுகிறது.

இதில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் அதே நேரத்தில் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் ,பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் ,மும்பை இந்தியன்ஸ் குஜராத் ஆகிய நான்கு அணிகளும் 8 புள்ளிகளுடன் உள்ளது.

இந்தஅணிகளுக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு கடினமே இதில் மும்பை தவிர மற்ற அணிகளுக்கு மூன்று ஆட்டம் உள்ளது. மும்பைக்கு மட்டும் இரண்டு போட்டியே இருக்கிறது. அந்த அணி கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது. இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது.

ஒரு அணியின் வெற்றி தோல்வி முடிவை பொருத்து மற்ற அணிகளின் நிலைமை இருக்கிறது. இதனால் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாக இருக்கும் மேலும் ரன்ரேட் பிளேஆப் சுற்று வாய்ப்பு பெற முக்கிய பங்கு வகிக்கும். பிளே ஆப் சுற்றை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags

Read MoreRead Less
Next Story