பார்டர் - கவாஸ்கர் கோப்பை ; நவம்பர் மாதம் ஆரம்பம் !!

பார்டர் - கவாஸ்கர் கோப்பை ; நவம்பர் மாதம் ஆரம்பம் !!

பார்டர் - கவாஸ்கர் கோப்பை

ஆஸ்திரேலியாவில் இந்தியா விளையாடும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் மாதம் ஆரம்பம் ஆக உள்ளது. கடைசியாக அங்கு விளையாடிய 2 தொடர்களில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணி இம்முறை ஆஸ்திரேலியாவில் வெற்றியை அடைய தயாராகி வருகிறது.

அதற்கு முன்பாக இந்தியா ஏ அணியும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்று 2 முதல் தர போட்டிகளில் விளையாட உள்ளது. அதுபோக பெர்த் நகரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராகவும் இந்தியா ஏ அணி ஒரு பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் அந்த போட்டிகளில் விளையாடுவதற்கான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக அறிவித்துள்ளனர்.

துணை கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அணியில் தமிழ்நாட்டிலிருந்து சாய் சுதர்சன் மற்றும் பாபா இந்திரஜித் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். சமீபத்திய வங்கதேச தொடரில் அசத்திய நித்திஷ் ரெட்டி மற்றும் படிக்கல் ஆகியோரும் தேர்வாகியுள்ளனர். பவுலிங் துறையில் கலில் அகமது, முகேஷ் குமார், யாஸ் தயாள், நவ்திப் சைனி, ஆல் ரவுண்டராக அசத்தி வரும் டானுஷ் கோட்டியான் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

Tags

Next Story