அடுத்த டோனி ரோகித்தான் - சுரேஷ் ரெய்னா

அடுத்த டோனி ரோகித்தான் - சுரேஷ் ரெய்னா

டோனி- சுரேஷ் ரெய்னா

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 போட்டிகளின் முடிவிலேயே 3 – 1* என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. டோனி போலவே இளம் வீரர்கள் பலருக்கும் வாய்ப்புகளை அளிக்கிறார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

இது குறித்து சுரேஷ் ரெய்னா பேசியபோது, ''டோனி தலைமையில் நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். கங்குலி தனது அணிக்கு எப்போதும் ஆதரவாக இருப்பார். டோனி தன்னை முன் நிறுத்தி அணியை வழி நடத்தினார். பின்னர் எம்எஸ் தோனி கேப்டனாக வந்து அணியை முன்னின்று வழி நடத்தினார். அதே வழியில் சரியான பாதையில் பயணிக்கும் ரோகித் அபாரமான கேப்டன். எனவே இந்த வெற்றிக்கான பாராட்டை நான் ரோகித் சர்மாவுக்கு கொடுக்க விரும்புகிறேன்.'' எனக் கூறினார்.

Tags

Next Story