ரூல்ஸ் -ஐ அமலுக்கு கொண்டுவர csk வலியுறுத்தல் - டோனி தக்கவைக்கப்படுவார ?? மற்ற ஐபிஎல் அணிகள் எதிர்ப்பு !!

ரூல்ஸ் -ஐ அமலுக்கு கொண்டுவர csk வலியுறுத்தல் - டோனி தக்கவைக்கப்படுவார ?? மற்ற ஐபிஎல் அணிகள் எதிர்ப்பு !!

டோனி

ஐபிஎல் அணி உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் கடந்த புதன் கிழமை மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் ஒவ்வொரு அணியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாக கடந்த இரு நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் டோனி தக்கவைக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் ஐபிஎல் விதிகளில் மாற்றம் கொண்டுவர சென்னை அணி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் விளையாடி வந்தால், அவரை அன்கேப்டு வீரர் (அதாவது தேசிய அணிக்காக விளையாடாத வீரர்) ஆக கருத்தில் கொள்ளப்படுவார் என்ற விதிமுறை ஐபிஎல் தொடரின் முதலாவது சீசன் துவங்கியதில் இருந்தே அமலில் இருந்து வந்தது.

ஐபிஎல் விதிகளில் மாற்றம் கொண்டுவர சென்னை அணி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த விதிமுறையை மீண்டும் அமலுக்கு கொண்டுவரும் போது சென்னை அணியில் எம்எஸ் டோனி தக்கவைக்கப்படலாம்.

இதனால் இந்த விதியை அமலுக்கு கொண்டு வர சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலியுறுத்தினர். இதற்கு மற்ற அணிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story