மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி

மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துவக்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை அண்ணா கலையரங்கில் நீலகிரி மாவட்ட இறகு பந்து சங்கம் சார்பில் 10-வது ஆண்டு மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி இன்று துவங்கியது. இந்த போட்டியினை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு. சதீஷ்குமார் அவர்கள் துவக்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெறும் இறகு பந்து போட்டியில் உதகை, குன்னூர் , கூடலூர், பந்தலூர், கோத்தகிரி பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்ட்ட வீரர் விராங்கனைகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர். இதில் 30 வயதிற்கு உட்பட்டவர்கள், 30 - முதல் 35 வயதுடையவர்கள், 35 - முதல் 40 வயதுடையார்கள், 40 - முதல் 45 வயதுடைபவர்கள், 45 - முதல் 50 வயதுடையார்கள் என 5-ந்து பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. வெற்றி பெறும் வீரர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கபடவுள்ளது.

Tags

Next Story