முன்னணி வீரர்கள் இல்லாதது பின்னடைவாகிப் போனது - 14 ஆட்டங்களில் 7-ல் வெற்றி பெற்றது மகிழ்ச்சி என ருதுராஜ் கெய்க்வாட் பேச்சு !!!

முன்னணி வீரர்கள் இல்லாதது பின்னடைவாகிப் போனது - 14 ஆட்டங்களில் 7-ல் வெற்றி பெற்றது மகிழ்ச்சி என ருதுராஜ் கெய்க்வாட் பேச்சு !!!

ருதுராஜ்

ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 27 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்கடித்து தொடர்ச்சியாக ஆறாவது வெற்றியை பெற்றதுடன் அடுத்து ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

இதில் பெங்களூரு நிர்ணயித்த 219 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி ஏழு விக்கெட் இழந்து 191 ரன்கள் எடுத்தது சென்னை, பெங்களூர், டெல்லி ,லக்னோ ஆகிய நான்கு அணிகள் தலா 14 புள்ளிகள் பெற்ற போதிலும் பெங்களூரு ரன் ரேட்டில் முந்தியது. நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் லீக் சுற்றுவுடன் நடையை கட்டியது.

தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கூறுகையில் போட்டி மிகவும் நன்றாகவே இருந்தது. பந்து சற்று நின்று வந்தது என்றாலும் 200 ரன் என்பது எட்டக்கூடியவை தான். சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்ததால் இலக்கை விரட்டிப் பிடிக்க முடியவில்லை.

கடைசி ஓவரில் சில பந்துக்களை அடிக்க முடியாதது குறித்து கேட்கிறீர்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் இது போல் நடப்பது சகஜம். கடந்த ஆண்டு எங்களது கடைசி நாக்கவுட் போட்டியை போலவே இரண்டு பந்தில் 10 ரன் தேவை என்ற சூழல் உருவானது. ஆனால் இந்த ஆண்டு நினைத்த மாதிரி முடிவு கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

இந்த சீசனை எடுத்துக் கொண்டால் 14 ஆட்டங்களில் 7ல் வெற்றி பெற்றது மகிழ்ச்சியே என்றாலும் இந்த ஆண்டில் முதல் ஆட்டத்திலிருந்து நிறைய சவால்களை சந்தித்தோம். மூன்று முன்னணி வீரர்கள் இல்லாதது பின்னடைவாகி போனது. காயம் காரணமாக தொடக்க ஆட்டக்காரர் டிவான் கான்வே வர முடியாமல் போனது. நிறைய வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது.

இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் பதிரானா காயமடைந்தார். மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான்சர்வதேச போட்டிக்காக தாயகம் திரும்பியதால் கடைசி கட்டத்தில் அவரை தவற விட்டோம். வீரர்கள் காயம் அடையும்போது ஒவ்வொரு ஆட்டத்திலும் சரியான கலவையில் அணியை தேர்வு செய்வது கடினமாகிவிடும் என்று கூறினார்.

Tags

Next Story