தோனி ஓய்வு பெறுகிறாரா? வருத்தத்தில் ரசிகர்கள் !

தோனி ஓய்வு பெறுகிறாரா? வருத்தத்தில் ரசிகர்கள் !

தோனி

தோனி வரும் மே 12 அன்று ஓய்வு பெறுவார் என ஒரு தகவல் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

தற்போது 2024 ஐபிஎல் தொடரில் காலில் தசைநார் கிழிசலுடன் தோனி விளையாடி வருகிறார். இந்த நிலையில் அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவது உறுதி என தெரிகிறது. அந்த வகையில் பார்த்தால் அவர் இந்த ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தனது கடைசி போட்டியில் ஆட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது.

சிஎஸ்கே அணி தனது அடுத்த லீக் போட்டியில் குஜராத் அணியை அகமதாபாத் மைதானத்தில் சந்திக்கிறது. அதற்கு அடுத்து மே 12 அன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்திக்க உள்ளது.

ஒருவேளை சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தால் தோனிக்கு அதுவே கடைசி போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

Tags

Read MoreRead Less
Next Story