அடுத்த 2 பந்துகளில் அவுட் - ஜேம்ஸ் ஆண்டர்சன்

அடுத்த 2 பந்துகளில் அவுட் - ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஜேம்ஸ் ஆண்டர்சன் - சுப்மன் கில்

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைவு பெற்ற நிலையில் சுப்மன் கில், ஜேம்ஸ் ஆண்டர்சன் இருவருக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இதுதொடர்பாக சுப்மன் கில்லிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அதற்கு அவர் "அந்த உரையாடல் என்ன என்பது எங்கள் இருவருக்குள் மட்டுமே இருப்பதுதான் சரியென்று நினைக்கிறேன்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் சுப்மன் கில்லுக்கும், தனக்கும் இடையே நடந்த வாக்குவாதம் குறித்து பேசியிருக்கிறார். அதாவது “அவரிடம் இந்தியாவுக்கு வெளியே நீங்கள் எவ்வளவு ரன்கள் அடித்துள்ளீர்கள்? என்ற வகையில் கேட்டேன். அதற்கு இது நீங்கள் ஓய்வு பெறுவதற்கான நேரம் என்று கில் என்னிடம் சொன்னார். ஆனால் அடுத்த 2 பந்துகள் கழித்து அவரை நான் அவுட்டாக்கினேன்” என்று கூறினார்.

Tags

Next Story