குத்துச்சண்டை போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்பு

குத்துச்சண்டை போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்பு

சேலத்தில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் 300 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்

சேலத்தில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் 300 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 17 மற்றும் 19 வய துக்குட்பட்டோருக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் போட்டியில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் போட்டியில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Tags

Next Story