டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி ; நெல்லை-திருச்சி அணிகள் மோதல் !!

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி ; நெல்லை-திருச்சி அணிகள் மோதல் !!

டி.என்.பி.எல்

தமிழ்நாடு பிரிமீயர் லீக்(டிஎன்பிஎல்) போட்டியின் 8வது தொடர் ஜூலை 5ம் தேதி சேலத்தில் தொடங்கியது. சேலத்தை தொடர்ந்து கோவை களத்துக்கான ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன. கடைசி ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், சேப்பாக் கில்லீஸ் அணிகள் களம் இறங்கினர்.

இதுவரை நடந்த 17 ஆட்டங்களில் முதல் 4 இடங்களில் உள்ள கோவை கிங்ஸ், நெல்லை கிங்ஸ், திருச்சி சோழாஸ், சேப்பாக் கில்லீஸ் அணிகள் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் முன்னிலையில் இருக்கின்றன. நெல்லையில் ஜூலை 24ம் தேதி வரை லீக் சுற்று ஆட்டங்கள் நடக்கும்.

நெல்லை இந்திய சிமெண்ட்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நெல்லை - திருச்சி அணிகள் மோதுகின்றன. நெல்லை அணி மோதிய ஒரு ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அந்த அணி வெற்றி பெற்றால் 7 புள்ளியுடன் முன்னேறும். திருச்சி வெற்றி பெற்றால் 6 புள்ளியை பெறும்.

Tags

Next Story