காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஸ்வரூபம் யாத்திரை

காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஸ்வரூபம் யாத்திரை

காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாதூர் மாசிய விரதம் முடித்து விஸ்வரூபம் யாத்திரை.

காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாதூர் மாசிய விரதம் முடித்து விஸ்வரூபம் யாத்திரை. காஞ்சிபுரம் ஓரிக்கை மணி மண்டபத்திலிருந்து புறப்பட்டு காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.





காஞ்சி காமகோடி பீடம் என அழைக்கப்படும் காஞ்சி சங்கர மடத்தின் 70 ஆவது பீடாதிபதியான காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயந்திர சரஸ்வதி சுவாமிகள் குரோதி வருட

சாதூர் மாசிய விரதத்தை கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 18 தேதியான நேற்று வரை சுமார் இரண்டு மாதங்கள் விரதம் மேற்கொண்டார். காஞ்சிபுரம் பாலாற்றின் கரை அருகே உள்ள ஓரிக்கை மணிவண்டபத்தில் தங்கி இருந்து சாதூர் மாசிய விரதம் மேற்கொண்ட நிலையில் நேற்று விரதம் முடிந்து காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஸ்வரூப யாத்திரை மேற்கொண்டார்.

விஸ்வரூப யாத்திரியை ஒட்டி மலர்களாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளிய காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சிபுரம் கோரிக்கை மணிமண்டபத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க வேத விற்பன்னர்கள் பாடி வர ஊர்வலமாக, சிலம்பாட்டம் தப்பாட்டம் மயிலாட்டம் கரகாட்டம் கட்டைக்கூத்து, பஜனைகள் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலை கலைஞர்கள் ஆடி வர காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளான காஞ்சிபுரம் உத்திரமேரூர் நெடுஞ்சாலை, கீரை மண்டபம், மேட்டு தெரு, வள்ளல் பச்சையப்பன் தெரு, காமராஜர் வீதி,நெல்லு கார தெரு, மேற்கு ராஜவீதி, வழியாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு விஸ்வரூப யாத்திரை பக்தர்களுக்கு அருள் பாலித்தவாறு வருகை தந்தார்.

விஸ்வரூபாய் யாத்திரையாக வருகை தந்த காஞ்சி சங்கராச்சாரியாருக்கு வழியெங்கும் நகரின் முக்கிய பிரமுகர்களும், பல்வேறு இந்து அமைப்பினரும்,வியாபாரம் பெருமக்களும்,மாலை மரியாதைகள், மலர் கீரிடங்கள்,பழ வகைகள் உள்ளிட்டவற்றை சமர்ப்பித்து பிரம்மாண்ட வரவேற்பு அளித்து காஞ்சி சங்கராச்சாரியாரை வரவேற்று வணங்கி வழிபட்டனர்.

வழியெங்கும் கூடியிருந்த பக்தர்களுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசிகளை வழங்கியபடி விஸ்வரூப யாத்திரை செய்து காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நிறைவு செய்தார். காஞ்சி சங்கராச்சாரியாரின் விஸ்வரூப யாத்திரையை ஒட்டி காஞ்சிபுரம் நகரம் முழுவதும் விழா கோலம் பூண்டிருந்தது.

Tags

Next Story