திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூபாய் 1.29 கோடி

திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூபாய் 1.29 கோடி

திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ. 1.29 கோடி

திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ. 1.29 கோடி



திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சிறப்பு பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் மலைக் கோயிலில் உள்ள உண்டியல்களில் நகை, பணம் காணிக்கையாக செலுத்தப்படுவது வழக்கம். திருக்கோயில் நிர்வாகம் சார்பில் மாதந்தோறும் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டு வருகின்றது. அதன்படி கடந்த 30 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி காலை தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெற்றது. மலைக்கோவில் வசந்த மண்டபத்தில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் திருக்கோயில் இணை ஆணையர் ரமணி மேற்பார்வையில் நடைபெற்றது‌. இதில் கோயில் பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவில் உண்டியல் மூலம் பக்தர்கள் ரூ‌ 1கோடியே 29 லட்சத்து 93 ஆயிரத்து 775 ரூபாய் செலுத்தப்பட்டது. மேலும் 635 கிராம் தங்கம், 9 கிலோ 485 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story