காலபைரவர் கோவிலில் அஷ்டமி பெரு விழா வழிபாடு

அதியமான் கோட்டை தட்சிண காசி கால பைரவர் திருக்கோயில் அஷ்டமி பெருவிழா சிறப்பு வழிபாடு
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் மற்றும் தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதியமான் கோட்டை தட்சிணகாசி காலபைவர் கோயிலில் நேற்று அஷ்டமி பெருவிழா வெகு விமரிசியாக நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு கால பைரவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் தர்மபுரி, வெளி மாவட்ட மற்றும் கர்நாடக, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாம்பல் பூசணியில் நெய் விளக்கேற்றி வழிபட்டனர். தொடர்ந்து சோடச பூஜைகள், பாராயணம், குருதி பூஜை, சிறப்ப யாகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்பு இரவு மிளகு மற்றும் மிளகாய் பூஜைகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது

Tags

Next Story