அவிநாசிலிங்கேஸ்வரர் கும்பாபிஷேக பெருவிழா தொடக்கம்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கருணாம்பிகை அம்மன் உடனமர் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பெருவிழா விநாயகர் பூஜையுடன் தொடங்கியது.
அவிநாசி கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா விநாயகர் பூஜையுடன் தொடங்கப்பட்டது. கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் நாயனார் தேவார பதிகம் பாடி உயிருடன் மீண்டும் உயிர்ப்பித்து எழச் செய்த திருத்தலமாகவும் பிரசித்தி பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோயில் கும்பாபிஷேக விழா பிள்ளையார் வழிபாடு, வேள்வி உள்ளிட்டவை நடைபெற்றது. 29ஆம் தேதி திங்கள்கிழமை காலை முதல் கால வேள்வி தொடங்கி பிப்ரவரி 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை எட்டு கால வேள்வி பூஜை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வாக பிப்ரவரி 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றும் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதற்காக 79 யாகசாலைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் 100 சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு ஆகம விதிகளின்படி கும்பாபிஷேக நிகழ்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிப்ரவரி இரண்டாம் தேதி மாலை 6 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம், இரவு 8 மணிக்கு சுவாமி திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தின் மிகப் பிரசித்தி பெற்ற கோவில் என்பதால் திருப்பூர் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்விற்கு வருகை தர இருப்பதால் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விதமான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags

Next Story