திருப்பாலைத்துறை பாலைவனநாதர் திருக்கோவில் சப்தாவர்ணம் புறப்பாடு

திருப்பாலைத்துறை பாலைவனநாதர் திருக்கோவில் சப்தாவர்ணம் புறப்பாடு திரளான பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம்
திருப்பாலைத்துறை பாலைவனநாதர் திருக்கோவில் சப்தாவர்ணம் புறப்பாடு திரளான பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் அமைந்துள்ள அருள்மிகு தவள வெண்ணகையாள் உடனுறை பாலைவனநாதர் திருக்கோயிலில் சித்திரை பவுர்ணமி பிரமோற்சவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது விழா நாட்களில் தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது அதன்படி சப்தாவர்ணம் புறப்பாடு நடைபெற்றது அதனையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அம்பாளும் எழுந்தருளி கோயிலின் ஆறு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, கோவில் குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் சாமி அம்பாள் வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story