கோயிலில் சென்றால் ஆலமரத்தைச் சுற்றிவர வேண்டுமா?

கோயிலில் சென்றால் ஆலமரத்தைச் சுற்றிவர வேண்டுமா?

கோயிலில் சென்றால் ஆலமரத்தைச் சுற்றிவர வேண்டும் 

கோயில் தரிசனம் நடத்துபவர்கள் கண்டிப்பாக ஆல மரத்தையும் வலம் வர வேண்டும் என்று கூறுவது ஓர் நம்பிக்கை மட்டுமல்ல. இதன் பின் மகத்தான ஓர் சாஸ்திரம் அடங்கியுள்ளது. மூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ஹரூபீணே, அக்ரத.சிவ ரூபாய விருட்சராஜாயதே நம இந்த மந்திரம் ஜெபித்து ஏழு முறை ஆலமரத்தை வலம் வர வேண்டுமென்பது விதி. பஞ்சாமிருதத்தின் நன்மைகள் தேவ விருட்சமான ஆல மரத்தைச் சுற்றி வரும் போது கிடைக்கப் பெறும் என்று ஆசாரியர்கள் கூறியுள்ளனர். ஒன்றாவதாக விஸ்வம் முழுதும் நிரம்பி நிற்கும்

ஸ்ரீ பரமேஸ்வரனின் நினைவு நமக்குள் நிறையும். மிகப் பயன்தரும் ஓர் உடற்பயிர்ச்சியாக ஆலமரத்தைச் சுற்றுவதை நாம் கருதலாம், என்பது இரண்டாவது பலன். நமது உடலுக்குத் தேவையான வாயுவும் ஒளியும் வலம் வரும் போது நாம் பெறுகின்றோம். ஆலமரத்திலிருந்து மிகுதியான பிராணவாயு (ஆக்சிஜன்) சுற்றி வலம் வரும் பக்தர் சுவாசிக்கலாம். கடைசியாக ஆலமரத்தின் நிழல், சுற்றி வரும் பக்தருக்கு குளிமை அளிக்கின்றது. ஆலமரத்தை வலம்வரும் போது பஞ்சாமிருதத்தின் நற்குணங்களை அடையலாம் என்பது கண்டறிந்தோம்.

ஆலமரம் வாயுவிலிருந்து கார்பனை உட்கொண்டு, ஆக்சிஜனை வெளிவிடுகின்றது. எல்லா தாவரங்களும் இவ்வாறே செய்கின்றன என்றாலும் ஆலமரத்தின் சிறுதண்டுகளும் இலைகளும் இருக்கும் அமைப்பின் விளைவாக எப்போதும் வாயுவை அசைவாடச் செய்து கொண்டிருக்கின்றன. ஆதலால் மிக அதிகம் ஆக்சிஜன் வெளியே விட ஆலமரத்துக்கு இயல்கின்றது. மேலும் சிறிதளவாவது ஓசோன் உற்பத்தி செய்யுவும் ஆலமரம் திறன் பெற்றிருக் கின்றது. இது வாயுவை விட பொருள் அடர்த்தியு - டையதனால் ஆலமரத்தின் கீழே தங்கி நிற்கின்றது. இது வாயுவை சுத்தம் செய்து சுவாச கோசத்திலுள்ள அணுக்களை அழிகின்றது.

இதனால் நம்முன்னோர்கள் ஆலமரத்தை வலம் வருவதை கட்டாயமாக்கி கோயில் விதிகளை வகுத்துள்ளனர்.

Tags

Next Story