வெறும் காலில் நடப்பது நல்லதா?

வெறும் காலில் நடப்பது நல்லதா?

வெறும் காலில் நடப்பது 

உணவருந்தும் போது கூட காலில் செருப்பணிந்திருப்பதை அந்தஸ்தாகக் கருதும் தலைமுறையில் நாம் வாழுகின்றோம்.

மிதியடிகள் மட்டும் பாதரட்சைகளாக இருந்த காலத்திலும் வெறும் காலில் நடப்பவர்களை நன்மையுள்ளவர்களின் கணத்தில் உட்படுத்தியிருந்தனர்.

ஒருவர் அணிந்திருக்கும் செருப்பின் விலையிலிருந்து அவருடைய சமூக நிலையை மதிப்பது இன்றைய சமூகம். உடற் பயிற்சிக்காக நடக்கும் போதும் இறுக்கிப்பிடிக்கும் 'ஷூ'ஸ்' அணிவது சமூகத்தில் கட்டாயமாகின்றது. "பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் " என்ற தாழ்வு மனப்பான்மையே இக்கட்டாயத்தை ஏற்படுத்துகின்றது. வெறும் காலில் நடந்தால் பார்ப்பவர்கள் தங்களை எளியவர்கள் என மதிப்பிடுவார்களே என்ற பிரச்சினை பலரையும் கவலைக்குள்ளாக்குகின்றது.

வெறும் காலில் சிறிது நேரமாவது நடப்பது சரியான முறையிலான இரத்த ஓட்டத்துக்கும் ஆரோக்கியமான வாழ்வுக்கும் இன்றியமையாதது என்று நவீன மருத்துவ இயல் அண்மையில் வெளிப்படுத்தியுள்ளது.

கரடுமுரடான தரையில் நடக்கும் போது பாதத்தின் கீழ் பாகம் நேரடியாக அழுத்தம் ஏற்கின்றது. இது உடற்செயல்பாட்டை ஊக்குவிக்கும் என்பது கண்டறிந்துள்ளனர். பாதத்துக்கு அடியில் விரல்கள் முதல் குதிகால் வரை அமைந்திருக்கும் ஒவ்வொரு பாகங்களும் நரம்புகள், மூளை, இருதயம், சிறுநீரகம் முதலிய எல்லா உறுப்புக . ளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளன. இதனால் ஒவ்வொரு பாகத்திலும் ஏற்படும் அழுத்தம், அதனுடன் தொடர்பு கொண்டுள்ள உறுப்பின் செயலாற்றலை துரிதப்படுத்தும். பாதத்துக்கடியில் ஊசிகள் குத்திச் செய்யும் அக்யுப்பங்சர் என்னும் சீன சிகிட்சையின் மறு உருவமே செருப்பில்லாமல் வெறும் காலில் நடப்பதில் இயற்கை நமக்களிக்கின்றது.

Tags

Read MoreRead Less
Next Story