மோகனூர் அசலதீபேஸ்வரர் சிவ ஆலயத்தில் மாசிமாத வளர்பிறை பிரதோஷச விழா

மோகனூர் அசலதீபேஸ்வரர் சிவ ஆலயத்தில் மாசி மாத பிரதோஷ வழிபாடு.பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மோகனூர் அசலதீபேஸ்வரர் சிவ ஆலயத்தில் மாசிமாத வளர்பிறை பிரதோஷச விழா நாமக்கல் மாவட்டம் ,மோகனூர் காவிரி கரை மீதுள்ள அருள்மிகு அசலதீபேஸ்வரர் சிவ ஆலயத்தில் மாசிமாத வளர்பிறை பிரதோஷச விழாவை முன்னிட்டு மூலவர் அசலதீபேஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கும் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், திருமஞ்சனம், பச்சரிசி மாவு கரைசல், மஞ்சள், சந்தனம், வீபூதி கலச தீர்த்தம் என பல்வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு தீப உபசரிப்புகளுடன் மகாதீபம் காண்பிக்கப்பட்டது. பின்னர் எம்பெருமான் ரிஷப வாகனத்தில் திருக்கோவிலை மூன்று முறை சுற்றிவந்து பக்தர்களுக்கு திரு காட்சி தந்தார் இதில் ஏராளாமான பகதர்கள் தரிசனம் பெற்று சென்றனர்.
Next Story