செஞ்சி அருகே முருகர் கோவில் தேரோட்டம்

செஞ்சி அருகே முருகர் கோவில் தேரோட்டம்

தேரோட்டம்

செஞ்சி அருகே முருகர் கோவில் தேரோட்டம்-திரளான பக்தர்கள் பங்கேற்பு.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல் ஒலக்கூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பசு மலை சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங் குனி உத்திர திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், சந்த னம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபி ஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபா ராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சுப்பிரமணியசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார், இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அங்கிருந்த திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. அதன் பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story