நாமக்கல் ஆஞ்சநேயர் !

நாமக்கல் ஆஞ்சநேயர் !

மாசி மாத பிறப்பு வெண்ணெய்க்காப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் என்றால் அது நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் தான். புனித பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் பார்க்க வேண்டிய முக்கியமான இடம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் .1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது. உலக புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர் நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார் .இங்கு 18 அடிஉயரம் உள்ள ஒற்றைக் கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது இது இந்தியாவிலேயே மிக உயரமான ஆஞ்சநேயர் சிலையாக உள்ளது இக்கோயில் விஷ்ணுவின் ஒரு அவதாரமான நரசிம்மர் அனுமன் மற்றும் லட்சுமி தேவிக்கு காட்சி அளித்த இடமாக உள்ளது. ராமாயண காலத்தில் சஞ்சீவி மூலிகை பெறுவதற்காக இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்துவந்தார். ஆஞ்சநேயர் பணி முடிந்ததும் மலையை அந்த இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார். அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்து வந்தார் அந்த நேரத்தில் சூரியன் உதயமான படியால் வான் வழியாக வந்து கொண்டிருந்த ஆஞ்சநேயர் தனது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்து விட்டு சந்தியாவதனத்தை முடித்தார்.மீண்டும் வந்து சாளக்கிராமத்தை தூக்க முயற்சிதார் ஆனால் அதை அவரால் தூக்க முடியவில்லை ராமனுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல் என்றொரு வான்ஒலி கேட்க ஆஞ்சநேயர் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பினார் .ராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் வருகிறார். ஆஞ்சநேயர் விட்டு போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்ற கோலத்தில் நமக்கெல்லாம் அருள் பாலிக்கிறார். இத்தலம் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும்..

Tags

Next Story