ஓணம் பண்டிகை முன்னிட்டு சபரிமலை நடை திறப்பு - பூஜையில் பங்கேற்க ஆன்லைன் முன்பதிவு !!

ஓணம் பண்டிகை முன்னிட்டு சபரிமலை நடை திறப்பு - பூஜையில் பங்கேற்க ஆன்லைன் முன்பதிவு !!

சபரிமலை நடை திறப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஓணத்தை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். கேரளாவில் இந்த ஆண்டு வருகிற வருகிற 15-ந் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி வருகிற 13-ந் தேதி மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.

கேரளாவில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை முன்னிட்டு சபரிமலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது ஆண்டாண்டு காலமாக வழக்கமாக நடத்து வருகிறது.

செப்டம்பர் 15, 16 ஆகிய இரண்டு நாட்களில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஓணம் விருந்து வழங்கப்படும் என்றும் 16ஆம் தேதி மாத வழிபாடு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும் என்றும் தினந்தோறும் பூஜைகள் நடைபெறும் என்றும் ஆன்லைன் மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள sabarimala.org.in. மூலம் முன்பதிவு செய்யலாம் என தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.

Tags

Next Story