ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்.

ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு  சிறப்பு அலங்காரம்.

ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்.

ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை முக்கிய விசேஷ தினங்களில் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் பல்வேறு அபிஷேகங்கள், ஆராதனைகள், சிறப்பு அலங்காரங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி கார்த்திகை அமாவாசை தினத்தை முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு முக்கிய அபிஷேகங்கள் நடைபெற்றது. முன்னதாக பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் வெள்ளி காப்பு எலுமிச்சை அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டு மகாதீபாரணை நடைபெற்றது. அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story