நத்தம் முருகன் கோவிலில் கார்த்திகை விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

நத்தம் முருகன் கோவிலில் கார்த்திகை விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி

நத்தம் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் கார்த்திகை விழா முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், திருமலைக்கேணியில் சித்திரை மாத கார்த்திகை விழாவையொட்டி மூலவர் சுப்ரமணிய சுவாமி, உற்ஸவர் முருகப்பெருமானுக்கும் பால்,பழம்,பன்னீர், சந்தனம், ஜவ்வாது, விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பின் மலர்களால் அலங்காரம் செய்ய வெள்ளிக் கவச அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து சுவாமி ஊர்வலம் நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதைப்போலவே நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story