தெரிந்துக்கொள்ள வேண்டிய ஆன்மிக தகவல் !!

தெரிந்துக்கொள்ள வேண்டிய ஆன்மிக தகவல் !!

ஆன்மிக தகவல்

கோபுர நிழல் அல்லது கொடிமரத்தின் நிழல் நம் வீட்டு மனையின் மீது விழாதபடி வீடு கட்ட வேண்டும். பெருமாள் கோவிலின் பின்புறம் சிவன், கணபதி கோவில் எதிர்புறம் வீடு கட்டக் கூடாது. முட்கள் உள்ள செடியை வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது.

ஜாதி, முல்லை, மல்லிகை, தாமரை, தும்பை, பாரிஜாதம், சாமந்தி போன்ற விநாயகர் மலர்களை வீட்டின் எல்லைக்குள் வளர்ப்பது மனை தோசத்தை சரி செய்யும். தனியாக தென்னை மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது. ஒற்றை பனைமரம் உள்ள இடத்தில் வீடு கட்ட கூடாது.

வீட்டின் வாசலில் அல்லது நில கதவை திறந்தவுடன் முருங்கை மரம் அல்லது மாமரத்தை பார்க்க கூடாது. நன்றாக வளர்ந்த வேப்பமரத்தை அது மீண்டும் வளராமல் வெட்டப்பட்டால், அந்த வீட்டில் உள்ள ஒற்றுமை, சந்தோசம், ஆரோக்கியம் கெட்டு விடும். துணை இல்லாத அல்லது மறு கன்று இல்லாத வாழை மரத்தை வெட்டியவருக்கு வம்ச விருத்தி இருக்காது.

Tags

Next Story