சிவகாசியில் தேரை அலங்கரிக்கும் பணிகள் தீவிரம்

சிவகாசியில் தேரை அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில்,இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.பொங்கல் திருவிழாவின் முக்கிய விழாவான தேர் திருவிழா,வரும் 10ம் தேதி (புதன் கிழமை) மாலை நடைபெறுகிறது.

தேர் திருவிழாவிற்காக,தேரடி வீதியில் நிறுத்தப்பட்டிருக்கும் தேர் அலங்காரம் செய்து, தயார்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.தேர் கலசம் பொருத்தும் பணிகள்,அலங்கார துணிகளால் தேர் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை,சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags

Next Story