வாழைப்பழம் தேங்காய் தெய்வங்களுக்கு படைப்பது ஏன்..?

வாழைப்பழம் தேங்காய் தெய்வங்களுக்கு படைப்பது ஏன்..?

ஆன்மிகம்

எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், தேங்காயை உடைத்து சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. இதுபோல மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என இறைவனிடம் வேண்டவே நாம் கடவுளுக்கு தேங்காய், வாழைப்பழம் படைக்கிறோம்.

அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை. மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னை மரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். கொட்டையிலிருந்து வருவதில்லை. அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக படைக்கும் மரபினை நமது முன்னோர்கள் உருவாக்கினார்கள்.

Tags

Next Story