கோயிலுக்குள் செல்லுமுன் செருப்பைக் கழற்றிப் போடுவது ஏன்?

கோயிலுக்குள் செல்லுமுன் செருப்பைக் கழற்றிப் போடுவது ஏன்?

கோயிலுக்குள் செல்லுமுன் செருப்பைக் கழற்றிப் போடுவது ஏன்

செருப்பணிவது சுயகௌரவப் பிரச்சனை யாக மக்கள் கருதுகின்றனர் என்று ஏற்கனவே பார்த்தோம்.

புண்ணியகருமங்கள் எல்லாமே காலணி இல்லாமல் செய்ய வேண்டும் என்று கூறுவதுண்டு என்றாலும் கோயிலில் நுழையும் போது செருப்பணியல் ஆகாது என்பது கட்டாயம். சில கோயில்களில் சட்டையும் அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் எல்லாக் கோயில்களிலும் செருப்பணிவது கட்டாயமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடை காரணமாக சிலர் கோயிலுக்கு வெளியில் நின்று வணங்கி விட்டுச் செல்வதையும் நாம் காண்கின்றோம்.

கோயில் சுவர்களுக்குட்பட்ட இடம் தெய்வ பூமி என்பதே இந்து மத நம்பிக்கை. இறைவன் வேறெங்கும் நிலைகொள்ளவில்லை என்று இதற்கு அர்த்தம் கொள்ள வேண்டாம். செருப்பை களைந்து கோயிலுக்குள் நுழையும் பக்தரின் பாதங்கள் இயல்பாகவே காந்த சக்தியுடைய தரையில் பதிகின்றன. மனிதனின் உடல் நலத்துக்கு உத்தமமானதெனக் கண்டறிந்துள்ள பூமியின் காந்த சக்தியின் ஒழுக்கு, பாதம் தரையில் பதியும் போல உடலுக்குள் செலுத்தப்படுகின்றது. அதுமட்டுமல்ல முலிகைகளுடைய தண்ணீர் விழுந்த பூமியானதால் கோயில் சுற்றுமுள்ள மலர்களும் இலைகளும் கலந்த மண்னுக்கு மருத்துவ குணங்களும் இருக்கலாம்.

காவத்தையும் காலணியையும் களைந்து இறை இவையெல்லாம் தரிசனம் செய்யும் போது நவீன சாஸ்திரம் விவரிக்கின்ற 'மாக்னடிக் தெரபி' அல்லது காந்த மனதில் கொண்டு சிகிடசை நம்முள் நடக்கின்றது.

இஷ்ட தெய்வத்தை நினைத்து தியானித்து வெகுநேரம் கோயிலில் செலவழிக்கும் போது மனதுக்கும் உடலுக்கும் ஒரே போல் நன்மைகள் கிடைக்கப்பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

அவ்வாறு ஆராதிக்க நாம் அறிந்திருக்க வேண்டியது ஒவ்வொரு தேவருக்கும் தனிப்பட்ட மந்திரம் கூற வேண்டும் என்பது ஆசாரிய விதி.

Tags

Next Story