பொய் சொல்வதில் முதல்வர் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு - பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

பொய் சொல்வதில்  முதல்வர் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு - பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

என் மண்,என் மக்கள் பாதயாத்திரை

பொய் சொல்வதில் முதல்வர் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழக பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலையின் என் மண் , என் மக்கள் பாதயாத்திரையானது ஈரோடு கிழக்கு , ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றது. இதில் பேசிய அவர் மகாகவி பாரதி மக்களிடையே மனிதனுக்கு மரணமில்லை என்ற தலைப்பில் கடைசியாக பேசிய ஊர் ஈரோடு என்றார்.ஒரு காலத்தில் உலக புகழ்பெற்றது காவல்துறை திமுக வந்த பிறகுதான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது .பொய் சொல்வதில் நோபல் பரிசு , தங்கப்பதக்கம் கொடுக்க வேண்டுமென்றால் முதல்வர் ஸ்டாலினுக்கு கொடுக்க வேண்டும்.திமுக 513 தேர்தல் அறிக்கையில் 99 % நிறைவேற்றப்பட்டுள்ளது என்று என்ன தைரியத்தில் ஸ்டாலின் சொல்கிறார் என்றும் , பா.ஜ.க சொல்கிறது தேர்தல் அறிக்கையில் 20 கூட நிறைவேற்றவில்லை திமுக .பாரளுமன்ற தேர்தலில் ஓட்டு கேட்க வரும் அமைச்சர்களை பொதுமக்கள் பட்டியில் அடையுங்கள். என்றார் .

Tags

Next Story