மதுபழக்கத்தை குறைக்க பொதுமக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

மதுபழக்கத்தை குறைக்க பொதுமக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

அமைச்சர் முத்துசாமி

மதுபழக்கத்தை குறைக்க பொதுமக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி இன்று ஈரோடு வருகை புரிந்த்து..இதனை வரவேற்று பார்வையிட்ட தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கலைஞர் கருணாநிதி எழுதிய எழுத்துக்கள் மக்களுக்கு பயன், மலர்ச்சியை, மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.மது பழக்கத்தை தவிர்க்கவும்,குறைக்க வேண்டும் என அரசின் சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைப்பதாகவும் , .மதுவிற்பனையை அதிகப்படுத்த வேண்டும் எண்ணம் கிடையாது.

இந்த பழக்கத்தில் இருந்து வெளியே வருவதற்கு தேவலயான நடவடிக்கையை செய்து வருகிறோம்‌.என்ற அமைச்சர் சு.முத்துசாமி டெட்ரா பாக்கெட் பற்றி ஆய்வறிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

Tags

Next Story