சேலத்துக்கு நாளை முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி வருகை

சேலத்துக்கு நாளை முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி வருகை

அலங்கார ஊர்தி

சேலத்துக்கு நாளை முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி வருகை தரவுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நிலையான பங்களிப்பை தரவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப் பட வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டன.

எழுத்தாளர் -கலைஞர் குழுவின் சார்பில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு கருணாநிதியின் பன்முக தன்மையினை எடுத்து செல்லும் வகையில் முத்தமிழ்த்தேர் என்ற பெயரில் அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ஊர்தி நாளை (ஞாயிற்றுக்கிழமை) சேலத்துக்கு வருகை தர உள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மற்றும் இளம் தலைமுறையினரின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story