சீட்டு பணம் மோசடி தம்பதி மீது வழக்கு

சீட்டு பணம் மோசடி தம்பதி மீது வழக்கு

காவல் நிலையம் 

சீட்டு பணம் மோசடி செய்த தம்பதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சின்னசேலம் அடுத்த பங்காரம் காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் மனைவி அஞ்சலை, 48; இவர், கடந்த 2021ம் ஆண்டு முதல் நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னையன் மனைவி சாந்தியிடம் இரண்டு 3 லட்சம் ரூபாய் சீட்டு கட்டி வந்துள்ளார்.

சீட்டு முடிந்த நிலையில் சாந்தி, அவரது கணவர் சின்னையன் ஆகியோர் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். சீட்டு பணத்தைக் கேட்ட அஞ்சலையை இருவரும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். புகாரின் பேரில் சாந்தி, சின்னையன் ஆகியோர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story