குட்கா விற்ற கடைக்காரர் கைது

குட்கா விற்ற கடைக்காரர் கைது

காவல் நிலையம் 

குட்கா விற்ற கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்தூர்பேட்டை தாலுகா எறையூர்பாளையம் பகுதியில் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எலவனாசூர்கோட்டை சப்- இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு குட்கா விற்ற லூர்துசாமி மகன் அருள்ஆனந்தன் 29 கைது செய்தனர். இது குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story