நெல் வயல்களில் வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு

நெல் வயல்களில் வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு

நெல்வயல்களில் ஆய்வு செய்த அதிகாரிகள்

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ஈருடையாம்பட்டு, ஆதனூர், வடமாமந்தூர், சுத்தமலை மற்றும் மங்கலம் ஆகிய கிராமங்களில் நெல் வயலில் இலைச் சுருட்டு புழுக்கள் தாக்கி பாதிப்படைந்த வயல்களை வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஈருடையாம்பட்டு,ஆதனூர், வடமாமந்தூர் சுத்தமலை, ஆற்காவாடி ஆகிய பகுதிகளில் நெற் பயிர்களின் இலைச்சுருட்டு புழுக்கள் தாக்கி சேதப்படுத்துவதாக செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து நேற்று ரிஷிவந்தியம் வேளாண்மை உதவி இயக்குனர் சியாம் சுந்தர் தலைமையில், வேளாண்மை அலுவலர் புஷ்பவள்ளி முன்னிலையில் பயிர்களை ஆய்வு செய்தனர்.

Tags

Next Story