தமிழ் சங்க முப்பெரும் விழா

தமிழ் சங்க முப்பெரும் விழா

முபெரும் விழா

சின்னசேலம் தமிழ் சங்கம், மும்மூர்த்திகள் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., லாட்ஜ் கூட்ட அரங்கில் நடத்திய நிகழ்ச்சிக்கு சின்னசேலம் தமிழ் சங்க காப்பாளர் நாட்டாண்மை தலைமை தாங்கினார்.

பழனிவேல், இதயம் கிருஷ்ணா, தங்கராசு,ஆசிரியர்கள் முருகன், வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். கவிஞர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். கவிதைத்தம்பியின் இன்பத்தமிழில் இனிய பெயர்கள் என்ற நூலை காப்பாளர் நாட்டாண்மை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

8தொடர்ந்து சமூக சேவையாளர்கள் தனக்கண்ணு, அம்பேத்கர், செந்தில்குமார் ஆகியோர்களுக்கு சமூக சேவை சக்கரவர்த்தி விருது, கவிதைத்தம்பிக்கு கவிராட்சசன் ஒட்டக்கூத்தர் விருதும் வழங்கப்பட்டது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 15 குழந்தைகள் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

Tags

Next Story