மனைவியை தாக்கிவர் மீது வழக்குப்பதிவு

மனைவியை தாக்கிவர் மீது வழக்குப்பதிவு

காவல் நிலையம் 

மனைவியை தாக்கிவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சின்னசேலம் அடுத்த தெங்கியாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் மனைவி சுஜிதா, 24; இருவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. ரஞ்சித் குடிப்பழக்கம் உடையவர். இவர் மது போதையில் மனைவி சுஜிதாவை கொடுமைபடுத்தியுள்ளார். கடந்த மே மாதம் ஏற்பட்ட பிரச்னையின் போது, ரஞ்சித் மற்றும் அவரது குடும்பத்தினர் சுஜிதாவை தாக்கியுள்ளனர்.

இது குறித்து சுஜிதா அளித்த புகாரின் பேரில், ரஞ்சித், மாமனார் அண்ணாமலை, மாமியார் வேம்பி, உறவினர்கள் ரஞ்சிதா,சபரிநாதன், ராஜா ஆகிய 6 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story