காங்கிரஸ் கட்சிக்கும் தொகுதி ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது ?

காங்கிரஸ் கட்சிக்கும் தொகுதி ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது ?

காங்கிரஸ் அலுவலகம்

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் நாளை வெளியாகிறது

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள எந்தெந்த தொகுதிகள் என இறுதி முடிவு எடுக்க காங்கிரஸ் தேர்தல் குழுவினர், திமுக தேர்தல் குழுவினரை நாளை சந்திக்க உள்ளனர்.

நாளை திமுக மற்றும் காங்கிரஸ் தேர்தல் குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து இறுதி முடிவு எடுக்க உள்ளனர்.. பெரும்பாலும் காங்கிரஸ் கட்சிக்கும் தொகுதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story